சுஜாதா – நவீன தமிழ் உரைநடையின் தலைமகன் மார்ச் 8, 2008
Posted by M Sheik Uduman Ali in Articles.Tags: சுஜாதா
trackback
எளிமையான எழுத்துக்கள்
ஆனால் வலிமையான வார்த்தைகள்.
இவரது நவீன உரைநடை பாணி பலரையும் கவர்ந்திழுத்த காந்தம். தமிழ் பேசவே தயங்கும் இன்றைய தலைமுறைக்கு இவரது எழுத்துக்கள் புதிய பார்வையையும், பேசவும் எழுதவும் தைரியத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையாகது.
எளியோனுக்கும் புரிகிற வகையில் குவாண்டம் பிஸிக்ஸ், கணிணி என அறிவியலின் குழப்பமான எல்லைகளை சுலபமாக விளக்குபவர்.
நினைத்த கருத்தை நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சொல்பவர்.
யாமறிந்தவரை இவரது எழுத்துக்களில் இன, மத, மொழி துவேஷங்களை தூவலாக செருகியோ, மறைமுகமாக மற்றாரை துவேஷித்தோ கண்டது கிடையாது.
ஆன்மிகத்தை துவேஷத்தப்படுத்தியது கிடையாது.
எனக்கான எழுத்தின் இன்ஸ்பிரேஷன் சுஜாதா. பலருக்கும் முன்மாதிரி போல.
அரசியலாகவும், மதுக்கடைகளில் தழும்பலாகவும் மாறிவரும் சில அல்லது பல தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில்
சுஜாதா தி லெஜன்ட்.
மறுமொழிகள்»
No comments yet — be the first.