அறையின் எண் 305ல் கடவுள் ஏப்ரல் 28, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: Arai En 305l Kadavul, அறையின் எண் 305ல் கடவு
trackback
மதிப்பிற்குரிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விண்ணப்பம். மற்ற அரை வேக்காட்டுத்தனமான சினிமாக்கள் மாதிரியே சாஃப்ட்வேர் துறையைப் பற்றியும் அதில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டும் இளைஞர்களை பற்றியுமான கிண்டல் தொனியை தாங்களுமா எடுத்துக் கொண்டீர்கள்.
200% வரை லாபம் வைத்து விற்கும் அல்லது ஏமாற்றும் மருந்து வியாபாரிகளோ, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரைக்கான ஒரு படத்திற்கு சில பல கோடிகளை சம்பளமாக வாங்கும் கதாநாயகர்களோ, இன்னும் நிறைய நிறைய கொழுத்த முதலைகளை உங்கள் கலைக் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?
மற்றபடி சாஃப்ட்வேர் துறையின் நிஜமான சவால்களை பற்றி ஒரு தனி பிளாக்காக எழுதலாம். ஒரு குத்துப்பாட்டு வைப்பது மாதிரி அவ்வளவு எளிதல்ல சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட். இன்னும் பல அரசாங்க நிறுவன அதிகாரிகளே இதற்கு நிகராக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பாவம் சிம்புதேவனுக்கும் தெரியவில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.
அறிமுகக் காட்சியிலேயே கதைக் களத்தையும் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக நேரேட்டிவாகவும் நேரடியாகவும் சொல்லி அசத்தி விடுகிறார்கள். மெல்ல எந்த புள்ளியை நோக்கி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருக்க திடீரென கடவுள் சந்தானம் மற்றும் கருப்புக்கு காட்சியளிக்கிறார். வழக்கம் போல ரொம்ப மென்மையாக மடிப்பு கலையாத வெள்ளை குர்தாவில் கடவுளாக பிரகாஷ்ராஜ். ஏனப்பு, கடவுள் டீக்காக கோர்ட், சூட் போட்டெல்லாம் வரமாட்டாரா என்ன?! தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று திட்டித் தீர்க்கும் சந்தானம் மற்றும் கருப்பு கூட்டணியிடம் பண உதவி செய்ய மாட்டேன், நான் கடவுள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்ற இரண்டு அக்ரிமெண்ட் போட்டு “மாரல்“ சப்போர்ட் செய்கிறார். இதை சுற்றிய சம்பவங்கள் தான் படம்.
கடவுளாக ரொம்ப ஸாஃப்ட்டாக பிரகாஷ்ராஜ் நடிப்பது ஏனோ அவ்வளவு ஒட்டவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராகவேத் தான் கற்பனை செய்ய முடிகிறது.
மஞ்சள் தண்ணி தெளித்து விட்ட ஆட்டுக்குட்டிகள் மாதிரியே நிற்கிறார்கள் சந்தானமும் கஞ்சா கருப்பும். இதனால் இவர்களின் டிபிக்கல் ஹூயூமர் சென்ஸ் கூட எடுபடாமல் போகிறது. இதைத் தவிர ஒரு டஜன் பாத்திரங்கள் திரைக்கதையை நகர்த்த உதவுகின்றன.

கடவுளின் மைக்ரோ மற்று மேக்ரோ தத்துவத்தை சந்தானத்தையும் கருப்பையும் கொசுவை விட சின்னதாக்கி விசுவலாக சொன்ன விதத்திலும், நாத்திகவாதியான ராஜேஷுடன் கடவுளைப் பற்றிய சித்தாந்தத்தை விளக்கும் வசனங்களும் சிம்புதேவனை அடையாளம் காட்டுகின்றன. இரண்டு காமெடி ஆக்டெர்களை வைத்து படம் பண்ணிய தைரியத்திற்கு பாராட்டலாம். அப்பாடா! நல்லவேளையாக கடவுள் இந்து சாமியாகவோ, இல்லை இயேசு சாமியாகவோ இல்லாமல் பொதுவாக காட்டியதற்கு நன்றி. கடவுள் சர்ச்சையான பல விசயங்களை பேசாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
வித்யாசாகரின் எளிமையான இசைக்கோப்பில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன. அதிலும் கேட்டது தான் என்றாலும் “குறை ஒன்றும் இல்லை“ பாடல் மனதை உருக்குகிறது.
கடவுள் கான்ஸப்டை கையிலெடுத்தவர் திரைக்கதையில் இன்னும் ஆழமான காட்சிகளை புகுத்தி இவரின் டிரேட்மார்க் காமெடி மூலமாகவும், கொஞ்சூண்டு மெஸேஜ்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். சாமிகளின் திருவிளையாடல்களை விளக்கும் பழைய கால சினிமாக்களில் வரும் சுவாரஸ்யம் கூட இதில் மிஸ்ஸிங். அதிலும் வழக்கம் போல கடவுளுக்கே மொபைல் போன் போல அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் ஒரு கேஜட்டை கொடுத்திருக்கிறார்கள். இதை திருடி விட்டு எஸ்கேப் ஆகும் சந்தானம், கருப்பு சம்பந்தமான காட்சிகளும் திருப்பங்களும் சஹாரா போல வறட்சியென்றால் பிரகாஷ்ராஜ் சம்பந்தமான காட்சிகள் ஆழமான புரிதல்கள் இல்லாமல் வழவழ அட்வைஸ் அரங்கமாக மாறிவிடுகிறது. இதனால் சில சிவப்பு சிந்தாந்தங்களும் யதார்த்தமான அட்வைஸ்களும் லேசாக கடந்து விடுகின்றன.
இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நம்மை சீட்டில் உட்கார்ந்து பார்க்க வைக்க முடிகிற அளவிற்கு வழக்கமான ஆக்சன் மற்றும் காதல் சினிமாக்களிலிருந்து விலகி கதை சொன்ன அழகிற்கு சிம்பு தேவனை பாராட்டலாம். குறையொன்றும் இல்லை…
அறை எண் 305ல் – கொஞ்சம் கொசுத் தொல்லை.
Hi Sheik,
i was confused with the first paragraph of your review.
whether you are supporting the s/w engineers or un supporting s/w engineers…
உங்கள் கலைக் கண்களுக்கு தெரியவில்லையா என்ன? தொழிலாளி, நிர்வாகி என்ற லாஜிக்குகள் தெரியாது என்றால் நீங்கள் இந்த படத்திற்கு வாங்கிய சம்பளத்திற்கும் உங்கள் அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் வாங்கிய சம்பளத்திற்கும் உள்ள விகிதாச்சாரமாவது தெரிந்திருக்கும். மற்றபடி சாஃப்ட்வேர் துறையைப் பற்றி நிறைய ஒரு தனி பிளாக்காக எழுதலாம். புரியாத ஜென்மங்களுக்கு அட்லீஸ்ட் புரியவாவது செய்யுமே.
The above sentence does it means that Simbudevan giving equal shares to his assistents or you are against him confusing…
may be enn mara mattaikkutahen puriyalayaoo!!!
hello thala..
nice review. particularly on the comment abt sw engineers, u r 100% true. Now lot of peoples are entered into sw industry and they know the reality. when we see these scenes, this becomes a comedy scene and it was handled and answered in a serious way. Getting laughter for these scenes.
Yes. u r right, the prakashraj role needs more importance and less dialogue. but his acting is amazing. fits good into the role. Hatsoff to Prakashraj.
Lot of Minus but interesting screeplay makes us to sit for whole movie. Simbhudevan.. u r appreciated.
“Kadhal Sei” song is good, but can improve the screenplay so that it sits in everyones heart…
udooz…nice review. nowadays i started eagerly waiting to read your reviews for all the movies. Keep Going…!!!!!!!!!!!!!!!
நன்றி நண்பர்களே. ஆதியின் வேண்டுகோளுக்கிணங்கி கொஞ்சம் புரிகிற மாதிரி முதல் பாராவை மூன்றாக உடைத்து எழுதியிருக்கிறேன்.
படித்து விட்டு சொல்லவும்.
Hi Sheik,
thanks pa eppo tahen nammalukku purunchu erukku..