தசாவதாரம் ஜூன் 18, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: தசாவதாரம், dasavatharam
trackback
பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் கயாஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக இருக்கும். இந்த மாதிரி கயாஷ் நிகழ்வுகள் ஒன்றிற்கொன்று சம்பந்தமுடையதாக இருக்கும். ஆச்சா! இதை தான் ஆன்மிகத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இறைவன் ஏதோவொரு வகையில் தொடர்புள்ளவைகளாக ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறுகின்றோம். கமலின் தசாவதாரமும் இதை மையப்படுத்தி தான்.
இதையெல்லாம் தாண்டி பிடித்த விசயம் மணல் கொள்ளை விவகாரத்தை ரத்தமும் சதையுமாக கமல் சொன்ன அழகு. ஆற்றங்கரை உள்ள ஊர்களுக்கு சென்று பாருங்கள். ஆற்று மணலை சூறையாடியதன் கோரம் தெரியும்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த 12ம் நூற்றாண்டு சண்டையில் ஆரம்பிக்கும் இந்த பட்டர்பிளை நிகழ்வு பயோ வெபன் (அதுதாங்க உயிரியல் ஆயுதம்), சுனாமி என பெரிய விளைவுகளுடன் முடிகிறது. இந்த இடைவெளியில் பத்து வித அரிதாரங்களில் ஒரு சேஷிங் நிகழ்வை மட்டும் கொண்டு மொத்த படமும் பரந்து விரிந்து நிற்கின்றது. பயேவெபனை கார்கோ விமானத்தில் ஏற்றி முடிக்கிற வரையில் ஹீரோ கமலுக்கும் வில்லன் கமலுக்கும் இடையே நடக்கும் சேஷிங் பரபரப்பு ஹாலிவுட் தரம்.
கமல் தன்னை உலக நாயகன் என்று நிரூபிக்க இனி அவசியமில்லை தான். பத்து விதமான கேரக்டர்களாக திரையில் கோலோச்சும் இவரது நடிப்பு பிரம்பிப்பின் உச்சக் கட்டம். “வெங்கேடஷ் ராவ், நீ தெலுங்கா?” என்று அக்மார்க் ஆந்திரவாசியாக வரும் பல்ராம் நாயுடு கேரக்டர் கலகலப்புடன் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கின்றது என்றால் வின்சென்ட் பூவராகன் கேரக்டர் சிலிர்க்க வைக்கின்றது. கறுத்த தேகத்தில் தடித்த வார்த்தைகளில் சாத்வீகத்துடன் இயற்கையை சுரண்டும் மூர்க்கர்களை எதிர்த்து போராடும் மண்ணின் மைந்தன் கேரக்டர். மனதை புரட்டுகிறார். இவையெல்லாம் தாண்டி அட்டகாசமான அமெரிக்க உச்சரிப்புடம் இங்கிலீஷ் பேசும் அமெரிக்க வில்லனாக வரும் கிறிஷ்டியன் ப்ளெட்சர், கலீபுல்லா கான், கிருஷ்ணவேணி பாட்டி இவர்களும் நம் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு உலக நாயகன் நடித்திருத்தும் இவர்களுக்கான அரிதாரங்களில் இருக்கும் செயற்கைத்தன்மையினால் சறுக்கியிருக்கிறார். எல்லோருக்கும் ஏதோ முகத்தில் “மாஸ்க்“ போட்ட மாதிரி இருக்கிறது.
பயோவெபனுடன் ஓடிக்கொண்டிருக்கும் கமலை நச்சுபிடுங்கும் ஆண்டாளாக அசின் அமர்களப்படுத்தியிருக்கிறார். 12ம் நூற்றாண்டு கோதையாகவும் மனதில் நிற்கிறார். அப்புறம் மல்லிகா ஷெராவத். இந்த கவர்ச்சி பிசாசு பண்ணும் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல். எங்கேயும் கேரக்டர்களை கொண்டு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவர் உலவ விட்டிருக்கும் நேர்த்தி அப்பப்பா! பிரமிக்க வைக்கின்றார். எப்போடா இன்டர்வெல் வரும் எப்போடா கிளைமாக்ஸ் வரும் என்று நினைக்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் இவரின் உழைப்பு நிச்சயம் தேசிய விருதிற்காவது அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு பக்கம் ஆன்மிகம் சார்ந்த நடுநிலைமையான கருத்து; மற்றொரு புறம் தனது பகுத்தறிவு கேள்வி; மற்றொரு புறம் சுற்றுப்புற சூழலிருக்கும் உண்மையான அக்கறை; அமெரிக்காவை பற்றிய கசப்புணர்வு என வசனங்களில் சிலிர்ப்புகின்றார். “உங்க பெருமாளுக்கு என்ன விட கக்கூஸ் தான் ரொம்ப சுத்தமோ“, “கடவுள் இல்லைனு நான் சொல்லல; இருந்தா நல்லாயிருக்குமேனு சொன்னேன்“, “என்னையா தெலுங்குகாரன் நான் தமிழ் பேசுறேன்; தஞ்சாவூர்காரன் நீ இங்கிலீஷ் பேசுறே – தமிழ உங்கள மாதிரி தெலுங்குகாரங்க வாழ வைப்பாங்கங்கிற நம்பிக்கை தான்“, “சாருக்கு அஞ்சு மொழி தெலுங்கிலேயே தெரியும்“ என்று நிறைய…நிறைய….
ஆனால் எல்லாவற்றையும் விட வின்சென்ட் பூவராகனின் நாகர்கோவில் பேச்சும், கபிலனாக வந்து மணல் கொள்ளையை பாடும் கபிலனின் வரிகளும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. திருஷ்டி பொட்டுகளும் உண்டு. ஜப்பானி கமலும் வில்லன் கமலும் மோதும் போது சின்னப் பிள்ளைத்தனமாக “ஹிரோஷிமா ஞபாகமிருக்கிறதா?… உனக்கு பெர்ல் ஹார்பர் ஞபாகமிருக்கிறதா?“ என்கின்றனர். பல்ராம் நாயுடு “என்ஏஷியெல்“ என்றால் என்ன என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்க அந்த மங்குனிக்கு உப்பு என்று கூட சொல்ல தெரியாமல் முழிக்கிறதாம்.
எல்லா சென்டர்களையும் கவர்வதிற்கு சில லாஜிக் பார்க்காத மசலாக்களும் உண்டு. எல்லா இடமும் தெரிந்த மாதிரி சென்னையை மிரட்டி எடுக்கும் அமெரிக்க வில்லன்; அப்படியே பொடி நடையாக நடந்து கிராஸிங்கில் ரயிலில் ஏறும் கமல் & அசின் என சிலக்காட்சிகள்.
காமிரா, பின்ணணி இசை, படத் தொகுப்பு இவை ஒரு சினிமாவின் ஜீவ நாடிகள். இந்தப் படத்தில் “It Happened” என்று சொல்வார்களே. அதே மாதிரி தான். 12ம் நூற்றாண்டு பிரம்பிப்பு முதல் சுனாமி வரை ரவி வர்மனின் காமிரா திரைக்கதை ப்ரசண்ட் செய்ததே தவிர புத்திசாலித்தனத்தை காட்ட முயலவில்லை. அதுவும் அந்த கும்மிருட்டு ஆற்றங்கரை. பிரும்மாண்டமாக இல்லை என்றாலும் தேவையான அளவிற்கு கதையோடு இழைந்த பின்ணணி இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அடுத்து தணிகாசலத்தின் கத்திரி, காட்சிக்கு காட்சி வெட்டித் தைத்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. வைரமுத்து வாலியின் வரிகளுக்கு உற்சாகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இசையமைத்திருக்கின்றார் ஹிமேஷ் ரேஷ்மயா. அதுவும் “கல்லை மட்டும் கண்டால்“… அற்புதம்.
பயோ வெபனை விழுங்கும் வில்லன்; சரியாக வரும் சுனாமி; ஐம்பது வருடமாக மகனை தேடும் கிருஷ்ணவேனி பாட்டி மண்ணில் விழுந்து கிடக்கும் பூவராகனை மகன் என்று நினைத்து உடைந்து அழும் காட்சி என கிளைமாக்ஸ் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
“கமலுக்கு என்ன! ஹாலிவுட் தரமப்பா“ என்று சொல்ல நம்முடைய சினிமாக்களின் வணிக வரம்பு மட்டுமே தடுக்கிறது என்பதற்கு தசாவதாரத்தில் சில உதாரணங்கள் உண்டு. அவை எல்லாமே கோடிகளை நம்பியே இருக்கின்றன.
“பைரேட்ஸ் ஆப் தி கரிபியன்“ தரத்திற்கு கமலின் சில அவதாரங்களுக்கு மேக்கப் வசதி கிடைத்திருந்தால் சிலிர்ப்பாக இருந்திருக்கும்.
சர்வதேச தரத்திலான விசுவல் எபெக்ட்ஸ். ரங்கராஜனை பெருமாள் சிலையோடு கட்டி கடலில் மூழ்கடிக்கும் காட்சியை இன்னும் சில கோடிகள் கிராபிக்ஸில் முதலீடு செய்திருந்தால் அதன் பிரம்மாண்டம் கூடியிருக்கும்.
கலை. 12ம் நூற்றாண்டு செட்டோ இல்லை சுனாமியின் பின் விளைவு காட்சிகளோ இன்னும் சில கோடிப் பணம் போட்டு எடுத்திருந்தால் ஹாலிவுட்டிற்கு “வ்வே“ காட்டியிருக்கலாம்.
என்ன செய்ய, ஹாலிவுட்டில் பிறக்காதது கமலின் கயாஷ் விளைவாகக் கூட இருக்கலாம்.
சில மில்லியன் டாலர்களில் எங்களால் சர்வதேச தரத்திற்கு தரமுடியவில்லை என்றாலும் அரிதாரங்களை பிரித்துப் பார்த்தால்
தசாவதாரம் – கமலின் ஐம்பது வருட சினிமா அனுபவத்தின் அசத்தலான புரபைல்.
Sheik,
you have captured all the aspects of the movie. as you mentioned if they would have spent some more money/concentration in the graphics, it would have been a big grand success.
now also we can say that it is a big success based on the efforts of kamal.
Sheik,
you have captured all the aspects of the movie. as you mentioned if they would have spent some more money/concentration in the graphics, it would have been a big grand success.
now also we can say that it is a big success based on the efforts of kamal.
– Yogesh…
Hi Sheik,
Once again good reivew from you.
thanks
Athy
Thank you friends
No word is there to express some thing about your writting…. Let the film at what ever height….. your words binding us in your view hight. that is the real strength of writting. that strength really you are having lot. May god bless you……… Long live you and your writting