மாநகரப் பேருந்தும் சில பயணங்களும் ஜூன் 29, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.trackback
உயர உயரப் பறக்கும் எண்ணெய் விலையேறறத்தைப் பார்த்தால் இனி மாநகரப் பேருந்து பயணமே மகத்தானது என்றவொரு முடிவுக்கு வந்துவர்கள் நிறைய பேர் என்று நினைக்கின்றேன். ஆனால், இப்பயணம் ஒன்றும் அவ்வளவு லேசுப்பட்டதல்ல. உங்கள் பர்ஸுகளையோ பொருட்களையோ அடிபோட காத்திருக்கும் திருட்டுக் கும்பல் ஒருபுறமிருக்க, எப்படா வெட்டிச்சண்டை இழுக்கலாம் என்றலட்சியத்துடன்காத்திருக்கும் வீரக்குலச்சிங்கள் ஒருபுறம்.
சில பயணங்கள் ஹைலைட்டான காமெடி ஷோவாகவோ, சில பயணங்கள் நம்மையே காமெடியனாகவோ ஆக்கிவிடுவதுண்டு.
சமீபத்தில் இப்படிதான், பிதுங்கிவழியும் கூட்டத்தோடுவந்தது நான் பயணம் செய்யவேண்டிய பேருந்து. ஏறவா வேண்டாமா என்றகுழப்பதோடுவழியில் நின்றதில் என்னை குண்டுக்கட்டாக உள்ளே தூக்கிவிட்டிருந்தார்கள். அட, இதுவும் நல்லாயிருக்கிறதே என்று வியந்தேன். உள்ளே வந்த பிறகு தான் தெரிந்தது படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு தம்பி பஸ்ஸை பேலன்ஸ் செய்ய அப்படிதொங்கவில்லை என்று. ஏனெனில், இந்த ஸ்டாப்பில் ஏறிய எனக்கே உள்ள மூச்சுவிட இடம் இருக்கிற போது அந்த தம்பி எப்போது ஏறியதோ?
நீண்ட சிக்னல் காத்திருப்பில் பஸ் நிற்கும்போது கையோடு அதீதமான இங்கிலீஷ் அறிவோ இல்லை அதிகமான பீட்டரோ விடத்தெரியும் என்றால் ஹிண்டு கிராஸ்வேர்ட், இல்லை குமுதம், ஆனந்தவிகடன் என்று எதையாவது வாங்கிக் கொள்ளவும். உங்கள் பொறுமையை சிரஞ்சீவியாக்கும் ஷார்ட்கர்ட் இது. இன்னும் நிறைய சொல்லலாம். பாவம் இந்த டிரைவர் தான். நல்ல அழகாத்தான் ஓரங்கட்டி நின்றிருப்பார். பேருந்தின் முன்பக்கத்தை சுற்றிச் சூழ அவசரமா ஒன்னுக்கு போறவன் மாதிரி டூவீலர் பயபுள்ளகய பண்ணுற அட்டூழியம் இருக்கே. ஒருத்தன் 90 டிகிரி நேரே பஸ்ஸுக்கு முன்னாடி நின்னா, இப்பத்தான் பைக்கு வாங்கிய இன்னொரு டூவீலர் டூபாக்கூர் ஒரு 60 டிகிரி சாய்மானத்துல நிப்பாட்டும். இந்த கேப்ப பில்லப் பண்ண இன்னொரு சாகஸப்புலி ஓடி வரும். இதெல்லாம் ஏதோ பத்து பதினைந்து நிமிடம் நடக்குதோன்னு நினைச்சா அது தப்பு. எல்லாமே ஒரு முப்பது இல்லை அறுபது செகண்டுகளுக்கு நடக்குற சர்வைவல் பிரச்சனை.
இதுல ஆட்டோக்காரர்கள் பண்ணுகிற அலம்பல் இருக்கிறதே. அவ்வளவு சைஸ் வண்டிய குறுக்காலேயும் நெடுக்காலயும் விட்டு பஸ்ஸை சுற்றி ஒரு லேயரே அமைந்து விடுவதுண்டு. சிக்னல் போட்டதும் நம்ம பஸ்டிரைவர் வண்டிய நகர்த்துறத்துக்கு படுற பாடு இருக்குதே அப்பாடா. அட அதற்காக இவங்க ஏதோ பாவம்னு நினைச்சுடாதீங்க. இடக்காலே இருந்து வடக்காலே 40 டிகிரியிலேயே இவங்க பஸ்ஸை திருப்புறஸ்டைலில் டூவீலர்ல போற பொது ஜனம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சரி கதைக்கு வருவோம், அவ்வளவு நேரக் காத்திருப்பிற்கு பிறகு சரி சிக்னல் விழுந்து தொலைந்ததேனு நினைச்சா நம்ம பஸ்ஸ சுற்றி நிக்கிறஆட்டோவும்டூவீலரும் போறதுக்குள்ள சிக்னல் விழுந்துடுமோனு ஒரு பதட்டம் வரும் பாருங்க. அப்பத்தான் ஒரு டூவீலர் பேக்கு லெஃப்ட் எடுக்கும். அட போங்கப்பா, கரெக்டா, கிராஸ் பண்ணும்போது ரெட் சிக்னல். இன்னொருமுறை அதே மாதிரி ஆட்டோ, அதே மாதிரி டூவீலர். எண்ணிக்கை கொஞ்சம் குறைவாக.
சரின்னு கிளம்பி அடுத்த ஸ்டாப்பிங்கில் நின்னால் இன்னும் ஒரு வண்டி ஜனம் ஏறும். அன்னிக்கு அப்படித்தாங்க, இதே மாதிரி கூட்டம். நடத்துனர் டிக்கெட் போட வண்டிய ஓரங்கட்டிட்டார். அப்பத்தான் ஏறிய ஒரு அறுபத்தைந்து வயசு பெரிய குடிமகன், நீ ஏன் நைனா, கவலைப்படுற டிக்கெட் எடுக்கலைனா எடுக்காதவந்தான் கஷ்டப்படனும். நீ வண்டிய கிளப்பு அப்படினு தன்னோட புத்திசாலித்தனத்த காட்டுச்சு. நடத்துனர் இதைக் கண்டுக்காமே டிக்கெட் கேட்டு கூவினார். பெருசா புலம்புச்சா, இல்ல உள்ள ஊத்துன சரக்கானு தெரியல, பெருசு அதையே மங்களமா பாடுச்சு. கம்முனு கிடனு நடத்துனர் சொல்லவும், ஏப்பா எனக்கு என்ன வயசாச்சு “வா, போ”னு சொல்றியேனு பெருசுக்கு ஒரே சோகம். போதாதுனு, நானும் முன்னாடி ஒரு சென்ட்ரல் கவெர்மென்ட் சர்வன்ட்டுப்பா, ரெஸ்பெக்ட் கொடுனு சொல்லிச்சு. நிக்கிற நமக்கே அது மேல காண்டு வந்ததுனா நடத்துனர். பாவம் அப்பவும் என்ன டிப்பார்மென்ட்டுனு கேட்டார். “ஸ்வீப்பர்” அப்படினு பெருசு சொல்லி தான் வேலைக்குச் சேர்ந்த நாள், நட்சத்திரம், அப்ப இருந்த அரிசி விலை எல்லாம் சொல்லி விஜயகாந்த்தையே தாண்டிருச்சு. நடத்துனர் என்னவாகிருப்பார்னு நீங்களே யூகிச்சுகோங்க.
இது இப்படினா, இன்னொரு நாள், கூட்டம் குறைவாகவே இருந்தாலும் ஒரு நடத்துனர் பெவிக்கால் போட்டு ஒட்டுன மாதிரியே உக்கார்ந்து டிரைவர்க்கு பக்கத்துலே நிக்கிறவங்கல ஆரம்பிச்சு அவரு பக்கம் நிக்கிறவங்க வரைக்கும் டிக்கெட்டை “பாஸிங்” முறையில் கேட்டுச்சு. போகப்போக கூட்டம் நெருசலாகி மூச்சிவிடவே இடமில்லாத போது நம்மாளு சிம்மாசனத்த விட்டு இறங்கவே இல்லை. ஒரு அக்கா முன்னாடி நின்னு இரண்டு தடவை கூவியும் நம்மாளு “ம்ம்ம்”. கொடுத்துவிடுமா நிக்கிறவங்ககிட்டனு சொன்னார். ஆனா, எவ்வளவு நேரம் தான் நிக்கிற எல்லாரும் கண்டெக்டர் வேலையோ அல்லது கன்டெக்டருக்காவோ வேலைப்பார்க்கிறது. ஒருத்தரும் மசியல. அந்தம்மா சிம்பிளா கேட்டுச்சு “வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது எழுந்து வாயா”. இதுக்கு மேலேயும் நம்மாளு.. ம்ம்ம்ம். அசரல, ஒருவேளை உண்மையிலேயே பெவிகால் இருக்குமோ.
இந்த கேப்புல ஒரு சிறுசு, சார் மேலப்படுதல, அப்பக்கூட நீங்க என் ஷூ கால மிதிச்சீங்க, ஒரு எக்ஸ்யூஸ் கூட கேக்கலனு திமிருச்சு. லேசா செருமி முறைந்து பார்த்து இங்க பாரு என் பக்கத்துல நிக்குதே ஒண்ணு அது ஏம்மேலத்தான் சாய்ஞ்ச்சுக் கிடந்து யாருக்கிட்டேயோ கடல போடுது. அதுக்காக குத்துதே குடையுதேனா சொகுசா காரு வாங்கி அதுல போடானு சொன்னேன். அப்பப்பார்ந்து டிரைவர் போட்ட பிரக்குலெ அந்த பேக்கு ஏம்மேல சாய, அவ்வளவு தான் ஒரு இரண்டு தள்ளி ஓடிப்போச்சு.
இப்படி தான் தினம் தோறும், எந்திரமயமாகிப்போன வாழ்வில் சில மைக்ரோ சுவாரஸ்யங்கள். இதெல்லாம் நீங்கள் பேமிலியாக காரில் போகும் போது கிடைக்காது. அதற்காக ஒரு பிரம்மச்சாரி பயணம் மேற்கொண்டு பாருங்கள்.
பயணங்கள் சுவாரஸ்யமானவை
Machi,
try to travel in electric train between paris adn thambaram in peek hours once you get a chance. you will find more interesting incidents.
yes dear.
Hi Sheik, today only got the time to read this article…Its simply superbbb…..
i enjoyed and enjoed a lot while reading this, appa vaeththu valaiya vandhudu enakku…
i can see combination of Hai Madan+ Sujatha + Vairamuthu kind of writting style..
My seroius humble request,..why dont you send this articles to Vikatan press…
please do it….
i will be very happpy and i beleive this will publish this….please do it and make entire Tamil makkal to read and enjoy this kind of articles…pls do ii