jump to navigation

அல்லாஹ் ரக்க ரஹ்மான் மார்ச் 1, 2009

Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.
Tags: , , ,
1 comment so far

“அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே அன்பை தேர்ந்தெடுத்தேன்என்ற உன்னதமான வரிகளால் தனது வாழ்வியலின் வெற்றியை தனக்கே உரிய தன்னடக்கத்துடன் ஆஸ்கர் விழாவில் தெரிவித்தார் அல்லாஹ் ரக்க ரஹ்மான். தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி என வெற்றிக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்தே நமக்கு தெரிந்த வழக்கமான வழிமுறைகளை எந்தவொரு வெற்றியாளரின் வாழ்விலும் எளிதாக பொருத்தி பார்க்கலாம். விசயம் அதுவல்ல. தனித்தன்மையான சில பண்புகள் தான் இந்த பொதுவான காரணிகள் வெற்றியாளர்கள் வசப்படும் காந்தங்களாக இருக்கும். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான், சுழியில் ஆரம்பித்து ஆழி சூழ் உலகை ஆட்கொண்ட இளைஞன். இந்தியாவின் இசை மேஸ்ட்ரோ.

உலகாளவிய வெற்றி பயணத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மானின் வழிமுறைகள் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடங்கள். “வெற்றியும் புகழும் கோப்பையில் இருக்கும் காபி போல, இருப்பதை காலி செய்தால் தான் புதியதை ஊற்ற முடியும் என்ற சூஃபியிஸ கோட்பாட்டை ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிகரமாக செயல்படுத்தி எந்தவொரு வெற்றியையும் தலைக்கு ஏற்றாமல் “எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அர்பணித்தலுடன் தன் வெற்றியை கொண்டாடி விட்டு புதியன கற்கவும்; செய்திடவும் முடிந்தது.

arr_oscar
“தாமரை இலை தண்ணீர் போன்றே இவ்வாழ்வை வாழ்வதாககூறும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றும் சாமியார் அல்ல. நேர்மையான சாமர்த்தியசாலி. தைரியசாலி. ஆமாம், ஃப்யூசன் என்பது ஏதோ தீட்டு போல பாவித்து குறை கூறி வந்த கட்டுப்பெட்டிகள் மத்தியில் நாட்டுபுறம், கர்நாடிக், ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், அராபிக், கவ்வாலி என ஏ.ஆர்.ரஹ்மான் பயணித்த தளங்களும் ஏற்படுத்திய ஃப்யூசன்களும் ஒரு பக்கம் என்றால், அவரது இசைக் கோவை இன்னொரு பக்கம் அவரது இசை பரவலுக்கு மூலங்களாக அமைந்தது. எழுதிக் கொள்ளுங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோவை அவரை இன்னும் உயர அழைத்துச் செல்லும்.

விமர்சனங்களை கண்டு உணர்ச்சி வசப்படாதவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கே இசை மேதைகள் என தங்களை தாங்களே போற்றிக் கொள்பவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி அடித்த கமென்டுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே பதில் “அது அவரது சொந்த கருத்து என்பது. உண்மையான பதில் அவரது வெற்றியில் இருக்கும்.

உலகின் மதிப்பு மிகுந்த ஒரு விழாவில் ஒன்றல்ல இரண்டு விருதுகள் வென்ற பிறகு புகழை இறைவனுக்கும், வெற்றியை அம்மாவிற்கும், பெருமையை தாய் மொழிக்கும் அர்பணித்த போது தான் உண்மையிலேயே மயிர் கூச்செரிந்தது; ஆனந்த கண்ணீரும் முளைத்தது. ஏதோ இத்தனை காலம் நாம் உழைத்து வாங்கியது போன்ற உணர்வு.

பதினேழு வருடங்களாக இந்த இளைஞனின் வெற்றி பயணத்தில் எனக்கான இன்ஸ்பிரேஷன் அவரது விருதுகளில் அல்ல; அவரது உழைப்பின் வெளிப்பாடுகளில். உழைப்பு மட்டுமல்ல; அதை சமர்பிக்கும் சாமர்த்தியமும் சேர்த்து தான் கோடம்பாக்கத்திலிருந்தவரை ஹாலிவுட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றது. வசதியான வாய்ப்பிற்காக காத்திருக்காமல் வந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிக்கிற ஃபார்முலா ஏ.ஆர்.ரஹ்மானுடையது.

அப்புறம் “ஈகோ. எல்லோருடைய உழைப்பையும் அங்கீகரிக்கும் மாண்பும், சம கால கலைஞர்களை பாராட்டும் பெருந்தன்மையும் “நிறைகுடங்களுக்கு மட்டும் உண்டான குணம். சாதாரண அங்கீகாரத்திற்கெல்லாம் “ஈகோ பிடித்து அழையும் மனிதர்களுக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

இதையெல்லாம் தாண்டி, ஆன்மிகத்தையும் நாட்டு பற்றையும் இவர் அணுகும் முறை. மற்றவர்களை போல சித்தாதங்கள் பேசியோ, இன, மத, மொழி பற்றி உருகியோ வழியாமல் கம்பீரமாக தன் நம்பிக்கையை பறைசாற்றும் விதம் ஒவ்வொரு இளைஞனும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
வீண் பெருமைகள் பேசி, எளிதில் எதற்கும் உணர்ச்சி வசப்படும் கோழைகளாய் இருப்பதனால் திறமைகள் இருந்தும் புழுதியில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்கள் பலருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஏ.ஆர்.ரஹ்மான் – இந்தியாவின் இன்ஸ்பிரேஷன்

What else? மொபைல் போன்கள் ஓகஸ்ட் 13, 2008

Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.
Tags: , , , ,
2 comments

கெட்டிக்காரன்: மச்சான், புது மொபைல் வாங்கியிருக்கேண்டா.


ஏமாளி: அட, சொல்லவே இல்லை. கேட்டிருந்தா நானும் ஏதாவது நல்ல மாடல் சொல்லியிருப்பேன்ல.


கெட்டிக்காரன்: அட, போ மச்சி, அவனவன் டூத்பேஸ்ட் வாங்குற மாதிரி போய் வாங்கிட்டு வர்றான். இதோ பாரு, மேட் இன் சைனா.

ஏமாளி: என்ன சைனா பீஸா? ஏன்டா அதப் போய் வாங்குனே.

கெட்டிக்காரன்: அப்போ, உங்கிட்ட உள்ளது மட்டும் என்ன மேட் இன் ஜப்பானா?

ஏமாளி: இது நோக்கியாடா.

கெட்டிக்காரன்: ஆனா மேட் இன் சைனா தானே. சரி, உன்துல அப்படி என்னாத்த பெருசா இருக்குதுனு சொல்லு.

ஏமாளி: இட் ஹேஸ், ப்ளூடூத், மீடியா பிளேயர், 2.0 பிக்ஸல் கேமிரா, ஜிபிஆர்எஸ் அன்ட் இமெயில். இது ஸ்மார்ட் போனுடா மாப்ளே.

கெட்டிக்காரன்: நீ சொல்ற ப்ளூடூத், ஆரஞ்சுடூத் உட்பட எல்லா கர்மமும் இதுலேயும் இருக்குடா. அடிசனலா, ட்யோல் சிம் கார்டு போட்டுக்கலாம்டா மாப்ளே. (காட்டி கடுப்படிக்கிறான் கெட்டிக்காரன்).

ஏமாளி: டச் ஸ்க்ரீன்டா?

கெட்டிக்காரன்: தோ பாரு, இது தான் ஸ்டைலஸ். டச் ஸ்கீரினுக்கு. இத இப்படியே இழுத்தா, ஆன்டனா.

ஏமாளி: ஓ, எஃப்எம்க்கா?

கெட்டிக்காரன்: இல்லடா, டிவிக்கு. பத்து சேனல் தெரியுதுடா மாப்ளே.

ஏமாளி: டிவியாஆஆஆ (வயிறு ஃபயறாகிறது). கேமிரா குவாலிட்டி எப்படிடா?

கெட்டிக்காரன்: இருக்குற மாதிரி காட்டுதுடா மாப்ளே. நான் என்ன மணிரத்னம் படத்திற்கு ஸ்டில்ஸா எடுக்கப்போறேன். இட்ஸ் எனஃப்.

ஏமாளி: மச்சான், ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ணு. (“டாக்ஸி…டாக்ஸி என்று அலறுகிறது கெட்டிக்காரனின் மொபைல்).

ஏமாளி: மச்சான், கொஞ்சம் காதுல குத்துதுலே.

கெட்டிக்காரன்: மாப்ளே, ஊர்ல அடுத்த திருவிழாவிற்கு என் மொபைல்ல இருந்தே ரிக்கார்டு போடலாம்டாவ். உன்து மாதிரி மனசுக்குள்ளேயே படிக்காது. ஹெட் போன் போட்டா உன்து மாதிரி ஓரளவிற்கு நல்லாயிருக்கும்டா.

ஏமாளி: பட், மச்சான். வாரண்ட்டி?! (ஒரு வித சிரிப்புடன்). அத்தோட சர்வீஸ்.

கெட்டிக்காரன்: மாப்ளே, வாரண்ட்டி வச்சு வாங்குனா மட்டும் என்ன பெருசா புடுங்கிட்டோம். தோ பாரு நம்ம சரண் புதுசா வாங்குன மொபைல் இரண்டு மாசத்துல டிஸ்ப்ளே பிராப்ளம் வந்து, இதுக்கெல்லாம் வாரண்ட்டி கிடையாதுன்னு கடைக்காரன் சொல்லி, செலவு வாங்குன காசுக்கு பாதிய கேட்டான். கடைசியா நம்ம பாய் கடையில தான் ரிப்பேர் பண்ணினான். இப்போ ஓடல. இது கழுத ஆறு மாசம் ஓடுனா போதும்டா, அடுத்தால பிரச்சனை வந்தா யூஸ் அன்ட் த்ரோ. இடைல பிரச்சனை வந்தா நம்ம பாய் கடை. வேறென்ன. மச்சான், அது மட்டுமில்ல, உன்து பதினஞ்சு ஆயிரம், இது வெறும் நாலாயிரம். உன்தோ, என்தோ யாரவது எடுத்தாலோ, தண்ணியில நனைஞ்சாலோ லாஸ்ட். ஆனா, நான் அடுத்ததா, நீ போட்ட காசுல இரண்டு மொபைல் வாங்கிடுவேன்.

ஏமாளி: யூஸர் எக்ஸ்பிரியன்ஸ் எப்படிடா மாப்ளே?

கெட்டிக்காரன்: மாப்ளே, இதோ பாரு, மீடியா பிளேயர்ல எலெக்ட்ரிக் ரிதமோட யூக்லைசர்ல்லாம் வருது. நீயே செக் பண்ணிட்டு சொல்லு.

(அதனுடைய யூஸர் எக்ஸ்ப்ரியன்ஸை பார்த்து எரிச்சலின் உச்சத்தில் ஏமாளி. கிடைத்த கேப்புல கடா வெட்டுறான் கெட்டிக்காரன், இப்படி)

கெட்டிக்காரன்:
What else you need? ஜிபிஎஸ் மட்டும் தான் இல்லை. மாப்ளே, கொடுத்த காசுக்கு இது போதும்டா. “என்டிடிவி
நியூஸ்பாக்குறியா?

ஏமாளி: தேங்ஸ்டா மச்சான்.

நேரங்கெட்ட நேரத்தில் எமாளியின் ஸ்மார்ட் போன்

“தோஸ்த்து படா தோஸ்த்து என்று கண்ணடித்து கூவியது